search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கில் இளம்பெண் பிணம்"

    நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தை அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். இவரும், அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த கவிப் பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுதியன் என்ற மகன் உள்ளான்.

    நேற்று சவாரிக்காக காரில் வீரக்குமார் வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனிமையில் இருந்த கவிப்பிரியா திடீரென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே கவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொங்கரையானூர் வந்தனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து கவிப்பிரியாவின் பெற்றோர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நெய்வேலி அருகே இளம்பெண் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர்தெரு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 26), தொழிலாளி. இவரது மனைவி காயத்திரி (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மோகன்ராஜ் தனது மனைவி காயத்திரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று இரவு மோகன்ராஜின் வீட்டிற்கு பின்புறம் உள்ள மூங்கில் மரத்தில் சேலையில் தூக்கு போட்ட நிலையில் காயத்திரி பிணமாக தொங்கினார்.

    இதை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் மோகன் ராஜிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் புவனகிரியில் உள்ள காயத்திரியின் தந்தை ஜோஸ்மெல் கேபிரியலை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாள் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே மோகன்ராஜ் வீட்டுக்கு வந்து காயத்திரியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மந்தாரக்குப்பம் போலீசில் காயத்திரியின் தந்தை ஜோஸ்மெல்கேபிரியல் புகார் செய்தார். புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 வருடத்தில் காயத்திரி இறந்திருப்பதால் குறிஞ்சிப்பாடி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×